Categories: CINEMA

எனக்கு புது phone வாங்கி தந்தாரு.. ஆனா மறுநாள் நான் கால் பண்ணா எடுக்கல.. எமோஷனலான பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் ஷக்தி..

முன்னணி நடிகரான வாழும் மகேந்திரா சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக மட்டுமில்லாமல் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், எடிட்டர் என பன்முக திறமை கொண்டவர். பாலு மஹிந்திராவின் படங்கள் இன்றும் காலத்தால் அழியாத காவியமாக உள்ளது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பாலுமகேந்திரா வென்றுள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சறுக்கல்கள் இருந்தது. முதலில் பாலு மகேந்திரா அகிலாவை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து நடிகை சோபாவை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் நடிகை மோனிகாவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனார்களாக வளம் வரும் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் முதலில் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனர்களாக வேலை பார்த்தனர். பாலு மகேந்திரா அகிலா தம்பதியினருக்கு சங்கி என்ற மகன் உள்ளார். பின்னர் சக்தி என்ற பெண்ணை தத்தெடுத்து பாலு மகேந்திரா வளர்த்து வந்தார். அந்தப் பெண் மீது பாலுமகேந்திரா அதீத பாசம் வைத்திருந்தார். ஒருமுறை பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் சக்தி அளித்த பேட்டியில் கூறியதாவது, 2010 ஆம் ஆண்டில் இருந்து அப்பா இறக்கும் வரை நான் அவருடன் தான் இருந்தேன்.

அந்த சமயத்தில் எனக்கு 11 வயது. அவர் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். அதையும் நிறைய பேர் தப்பா பேசினார்கள். எங்களுடைய உறவை யாருக்குமே புரிய வைக்கணும் என்று அவசியம் இல்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு நான் வேலைக்கு சென்று வந்ததால் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் அப்பாவை பார்க்க முடியும். ஒரு நாள் அவர் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வா வெளியே போகலாம் என அழைத்துச் சென்றார். நாங்கள் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். அதன் பிறகு அருகில் இருக்கும் மொபைல் கடைக்கு சென்று எனக்கு போன் வாங்கி கொடுத்தார். முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் அப்பாவிடம் எனக்கு செல்போன் வாங்கி தாங்க என கேட்டேன். அவர் ஒரு மாதம் கழித்து வாங்கி தருகிறேன் என கூறினார்.

அந்த கடைக்கு சென்றவுடன் உனக்கு பிடித்த மொபைலை எடுத்துக் கொள் என கூறினார். எனக்கு அது பற்றி தெரியாது என்பதால் நீங்களே எடுத்து தாருங்கள் என கூறினேன். அவரும் ஒரு மொபைல் வாங்கி சிம் போட்டு கொடுத்தார். பின்னர் என்னை வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்து விட்டார். அப்போது நீ யாரையும் நம்பாதே. உனக்கு பிடித்ததை செய். யார் என்ன கூறினாலும் கண்டுகொள்ளாதே. நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். உன்னை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படாதே என கூறினார். அப்போது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கமாக இரவு நேரங்களில் அப்பாவிடம் இருந்து கால் வரும்.

ஆனால் அன்று வரவில்லை நான் அழைத்தபோதும் அதனை அவர் ஏற்கவில்லை. மறுநாள் காலை அப்பாவை தொடர்பு கொண்டேன் அப்போதும் அவர் எடுக்கவில்லை. பின்னர் கார் டிரைவர் மூலமாக அப்பா இறந்தது தெரியவந்தது. அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என எமோஷனலாக பேசி உள்ளார்.

Archana
Archana

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

4 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

4 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

5 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

10 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

11 மணி நேரங்கள் ago