‘நீயா நானா’ கோபிநாத் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத்.
இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதையும் கடந்து நடிகராக நிமிர்ந்து நில், திருநாள் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பிரபலமானவர்.
தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் பொருந்தும் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவதும் தான் இவரது தனித்துவம் என்றே கூறலாம்.
இவர் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஜெயா டிவி ,என் டி டி வி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய, இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சி ‘நீயா நானா’வில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் தினமும் ‘நல்லதா நாலு விஷயம்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிடுகிறார். அதை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
நீயா நானா கோபிநாத் அவர்களுக்கு கடந்த 2010ல் துர்கா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வெண்பா என்ற மகள் இருக்கிறார்.
தற்பொழுது இவர்களது புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…