Categories: CINEMA

நேருக்கு நேர் ஷூட்டிங்கின் போது மணிரத்னத்துக்கு தண்ணி காட்டிய அஜித்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

ஆசை படத்துக்குப் பிறகு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். அந்த படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் ஆலயம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. படத்தின் ஷூட்டிங் தொடங்கி அஜித் 10 நாட்கள் வரை இந்த படத்தில் நடித்தும் இருந்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் அல்லது நீக்கப்பட்டார். இதுபற்றி பலவிதமான தகவல்கள் தமிழ் சினிமா உலகில் பரவி வருகின்றன. இந்நிலையில் ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிபாரதி அந்த சம்பவம் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவர் பேசிய நேர்காணலில் “அந்த படத்தில் அஜித் 8 நாட்கள் நடித்தார். அதன் பிறகு அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். எத்தனை முறை போன் செய்தாலும் அவர் எடுக்கவில்லை. இதனால் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சுஹாசினி மேடம் அவருக்கு போன் செய்ததும் அவர் எடுத்தார். அப்போது மணிரத்னம் உங்களை சந்திக்க வேண்டும் என விரும்புகிறார் என சொல்கிறார் என்று கூறியதும் நாளை வந்து சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் சொன்னது போல அன்று அஜித் வரவில்லை. மணிரத்னம் சார் 2 மணிநேரம் வரை காத்திருந்தார். ஆனால் அஜித் கடைசிவரை வரவேயில்லை.  அதன் பிறகுதான் அஜித்தை நீக்கிவிடலாம் என்ற முடிவை எடுத்தார். இதற்கு இயக்குனர் வசந்த் தயங்கினார். அதற்கு மணிரத்னம் எவ்வளவு செலவு ஆகி இருந்தாலும் பரவாயில்லை. நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறி அந்த முடிவை எடுத்தார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

3 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

4 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

5 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

10 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

10 மணி நேரங்கள் ago