#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.
இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். யாரிடமும் பணம் கடன் கேட்க விரும்பாதவரான பாலு மகேந்திராவை தேடி வந்து அவரது அலுவலகத்தில் சந்தித்த சில்க் ஸ்மிதா ஒரு கணிசமான தொகையை அவருக்குக் கொடுத்துள்ளார். அதை பாலு மகேந்திரா வாங்க மறுத்த போதும் அவர் கைகளில் திணித்துள்ளார்.
அப்போது பாலு மகேந்திரா தன்னால் இந்த தொகையை எப்போது திருப்பித் தரமுடியும் என தெரியவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு சில்க் ஸ்மிதா ”நீங்க திருப்பிக் குடுக்கனும்கிறதுக்காக இத நான் உங்களுக்கு கொடுக்கல சார்’ என சொல்லி சென்றுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பாலுமகேந்திராவிடம் அப்போது உதவியாளராக இருந்த எழுத்தாளர் சுகா தன்னுடைய முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளார்.
பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை மற்றும் நீங்கள் கேட்டவை ஆகிய படங்களில் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார். மற்ற படங்களில் வெறும் கவர்ச்சி பண்டமாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட சில்க் ஸ்மிதாவை நீங்கள் கேட்டவை படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் பாலு மகேந்திரா. அதே போல மூன்றாம் பிறை படத்தில் வயதான கணவருக்கு வாழ்க்கைபட்டு செக்ஸ் கிடைக்காமல் அவதிப்படும் ஒரு பெண்ணாக சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கும்.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…