‘வம்சம்’ சீரியல் புகழ் பூமிகா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?  அடக்கடவுளே.. இப்படி மாறிட்டாங்களே..

By Begam

Published on:

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சந்தியா ஜகர்ல முடி. சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான ‘வம்சம்’ என்ற சீரியலில் பூமிக்காக கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இவர். அதுமட்டுமல்லாமல் சந்திரலேகா போன்ற பல சீரியல்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

   

‘செல்லமடி நீ எனக்கு’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.அறிமுகமானவர் நடிகை சந்தியா ஜகர்லமுடி.இதைத்தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அத்திப்பூக்கள்’ என்ற சீரியல் மூலம் பிரபலமான  இவருக்கு வம்சம் சீரியல் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

தமிழ், தெலுங்கு தொடர்களில் நடித்துவந்த இவர் கடைசியாக சந்திரலேகா என்ற தொடரில் நடித்தார். தற்போது இவர் சீரியல் பக்கம் வராமல் தெருநாய்களை பாதுகாத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.  இவரை சீரியலில் பார்க்க மாட்டோமோ என்று ஏங்கிய ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் புது தொடர் ‘சந்தியா ராகம்’. இந்த தொடரில் ஜானகி-சந்தியா என்ற இரு சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களை சுற்றிய கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இந்த சீரியலில் ‘வம்சம்’ சீரியல் நடிகை சந்தியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் தற்பொழுது படுகுஷியில் உள்ளனர்.