திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நடிகை சமந்தா… உங்க முகத்துல அப்படியே தெய்வீக கலை தெரியுதே…

By Begam

Published on:

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

   

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் ஒரு வருடத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டே அவர் ஒப்புக்கொண்ட படங்களின் பணிகளையும் செய்து முடித்துவிட்டார்.

 

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டுள்ளார். தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நடிகை சமந்தா ‘சாகி’ என்கிற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகவும்  செயல்பட்டு வருகிறார். இதுமட்டுமின்றி பல்வேறு விதமான சமுக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இப்படி பிசியாக இருக்கும் நடிகை சமந்தா தற்பொழுது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் ,சாமி படம் வழங்கினர். அதன்பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த நடிகை சமநந்த நடிகை சமந்தா, தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…