நடிகர் விக்ரம் தனது வீட்டில் பணி பெண்ணாக வேலைசெய்யும் மேரி என்பவரின் மகனுக்கு பெசன்ட் நகரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றை திருமண பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். நடிகர் விக்ரம் ஒரு நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்.
1990 இல் வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ திரைப்படத்தில் தனது மொத்த உழைப்பையும் கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இவர் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.
இந்நிலையில் தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணி பெண்ணாக வேலை செய்யும் மேரி என்பவரது மகன் திருமண விழாவில் இவர் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தி உள்ளார்.மேலும் மணமக்களுக்கு திருமண பரிசாக பிரமாண்ட வீடு ஒன்றை பெசன்ட் நகரில் வாங்கி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘இந்த மனசு யாருக்கு வரும்?’என்று கூறி நடிகர் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…
நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…