#image_title
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள். இவருடைய திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை கொண்ட படமாக தான் இருக்கும். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார்.
2003 ஆம் ஆண்டு ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதை ஆசிரியராக பணியாற்றி சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே ‘தமிழக அரசின் சிறந்த கதை ஆசிரியருக்கான விருதை’ பெற்றார். தற்பொழுது 46 வயதாகும் சமுத்திரக்கனி இயக்குனர் பாலச்சந்திரன் அவர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். மக்களுக்குத் தான் சொல்ல நினைக்கும் கருத்துக்களை தரமான படங்கள் தெரிவித்துக் கொண்டு வருகிறார். இயக்கத்தையும் தாண்டி பல்வேறு படங்களில் வில்லன், ஹீரோ என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் ‘பருத்திவீரன்’ பட சர்ச்சையில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டிருந்தார். நடிகர்கள் அவ்வப்பொழுது கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படி தற்பொழுது சங்கரநாராயணர் கோயிலில் சமுத்திரகனி சுவாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் சமுத்திரக்கனி. பின்னர் ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் செய்தியாளர்கள்,
இந்த கால இளைஞர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க? என்று கேட்க, ‘ அவங்களுக்கு நான் ஒன்னும் சொல்ல விரும்பல .அவங்க தெளிவா இருக்காங்க. அவங்க நல்லா வருவாங்க.’ என்று கூறினார், ‘நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, ‘வரட்டும் மக்களுக்கு நல்லது செய்யட்டும்’ என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ….
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…