#image_title
இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பலரும் பலவித காரணங்களை கூறி வந்த நிலையில் மீண்டும் ஜிவி பிரகாஷ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சிறு வயது முதலே இசை மீது இருந்த ஆர்வம் காரணமாக பாடல்களை பாடி பிரபலமான ஜிவி பிரகாஷ் பிறகு இசையை முறையாக கற்றுக் கொண்டு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார்.
2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் முதல் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஓரம்போ, கிரீடம், பொல்லாதவன், குசேலன், ஆனந்த தாண்டவும் உள்ளிட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
இசையைத் தாண்டி பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவராக இருக்கும் இவர் சைந்தவியை பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்து வந்தார். 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்தது .சமீபத்தில் தான் அன்வி என்கின்ற மகளும் பிறந்தது. திருமணமாகி பல வருடத்திற்கு பிறகு நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கத்தில் நாங்கள் பிரியப்போவதாக இருவரும் அறிவித்திருந்தார்கள்.
இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதை பார்த்த பலரும் இவர்கள் பிரிந்ததற்கு பல காரணங்களை கூறி வந்தார்கள். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தற்போது புதியதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது “புரிதலும் போதுமான விவரங்கள் இல்லாமல் அனுமானத்தின் பெயரில் இரு மனங்கள் இணைவது பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.
#image_title
பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது கிடையாது. யாரோ ஒரு தனி நபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும் காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் உறவினர்கள் அறிவார்கள். ஒவ்வொரு தனி மனிதனின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளியுங்கள்” என்று ஜிவி பிரகாஷ் கூறியிருக்கிறார்.
நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…
நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…
பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…