நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.
அங்கு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு நயன்தாரா நெற்றியில் ரொமான்டிக் மூடில் காதல் பொங்க விக்னேஷ் சிவன் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியானது. அங்கு இருவரும் ரொமான்டிக் மூடில் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இருவரும் தொடர்ந்து ஹனிமூன் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் புதிய லூக்கில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றன. அதாவது விக்னேஷ் சிவன் மேல் நயன்தாரா சாய்ந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை அதிக அளவு இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram