தாய்லாந்தில் ஏழை பெண் ஒருவருக்கு கடல் உணவில் இருந்து கோடிகள் மதிப்பு கொண்ட அரியவகை முத்து கிடைத்துள்ளதை அடுத்து அவர் ஒரே நாளில் கோடிபதியாகியுள்ளார். தாய்லாந்தின் சாதுன் மாகாணத்தை சேர்ந்தவர் Kodchakorn Tantiwiwatkul. ஏழையான இவர் ஜனவரி 30 அன்று இரவு உணவுக்காக சுமார் 160 ரூபாய் மதிப்பிலான கடல் நத்தைகளை வாங்கியுள்ளார்.
மீன் சந்தையில் இருந்து வீடு திரும்பிய அவர், கடல் நத்தைகளை உணவுக்காக சுத்தம் செய்யும் பொருட்டு, ஒவ்வொன்றையும் இரண்டாக பிளந்துள்ளார். அதில் ஒன்றில் ஆரஞ்சு வண்ணத்தில் கோலி ஒன்று இருப்பதை கண்டுள்ளார். ஆனால் அது கல்லாக இருக்கலாம் என கருதியவருக்கு, உண்மையில் அது 6 கிராம் எடை கொண்ட ஆரஞ்சு மெலோ முத்து என்பது தெரிய வந்தது.
தற்போது அந்த முத்தை உரிய விலைக்கு விற்கும் முடிவில் உள்ளார் அவர். அதன் தரத்தை சோதித்து, கோடிகள் வரை விலை கிடைக்கலாம் என்றே கூறப்படுகிறது. பொதுவாக, உயர் தர மெலோ முத்து வகைகளுக்கு கோடிகள் மதிப்பு உண்டு என கூறப்படுகிறது.
Kodchakorn-ன் தந்தை விபத்தில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது மனைவியும் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வருவதால் பணத்திற்கு அதிக தேவை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள். சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…
தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…
பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…
மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…