Categories: NEWS

தாய் மற்றும் தந்தையை 2 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த இளம் பிள்ளைகள் : பின்னர் நேர்ந்த மற்றொரு சோகம்!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பெற்றோரையும், பாட்டியையும் இழந்து இரண்டு சிறுவர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் (45).

மருந்து கடை உரிமையாளர். இவருடைய மனைவி ஜெயந்தி (40). இவர்களுடைய மகன் விபின் (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சாமுவேல் (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் தன்ராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்ந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந் திகதி இறந்தார்.

அவரை உடனிருந்து கவனித்து வந்த அவருடைய மனைவி ஜெயந்திக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், கணவர் இறந்த 2 நாட்கள் கழித்து 17-ந் திகதி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஜெயந்தியை உடனிருந்து கவனித்த அவருடைய தாய் பத்மா துரைக்கு (60) தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரும் கடந்த வாரம் கொரோனாவுக்கு பலியானார். ஒரே குடும்பத்தில் பெற்றோர் மற்றும் பாட்டி என 3 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அந்த சோகத்தை தாங்க முடியாமல் விபின், சாமுவேல் ஆகியோர் கண்ணீருடன் சோகத்தில் தவித்து வருகின்றனர்.

சிகிச்சை பெற வேண்டும் இந்த நிலையில் தன்ராஜின் தாய் சாரதா (65) தனது பேரக் குழந்தை கள் விபின், சாமுவேல் ஆகியோரை தற்போது பராமரித்து வருகிறார்.

பெற்றோரை இழந்த விபின், சாமுவேல் ஆகியோர் கூறுகையில் கொரோனா சிகிச்சைக்கு சென்ற அப்பா, அம்மா திரும்பி வர வில்லை. அவர்களை இழந்து நிற்கும் எங்களின் உயர்கல்விக்கு யாராவது உதவ வேண்டும் என்றனர்.

Archana
Archana

Recent Posts

ஆகஸ்து 15 நல்ல நாள் இல்லை- சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள், இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…

35 mins ago

5 DVD-ல இருந்து எடுத்தது தான் அந்த படம்.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன பிரஷாந்த்.. அட கடவுளே…

தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…

45 mins ago

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் திரையுலகில் '18 வயசு' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து…

1 hour ago

தன்னை விட 5 வயது மூத்த நடிகையுடன் இணையும் கவின்… அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும்…

1 hour ago

அடேங்கப்பா… சமந்தா-க்கு இவ்ளோ வயசாகிடுச்சா…? இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரின் சொத்து மதிப்பு இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக…

2 hours ago

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

17 hours ago