Categories: NEWS

சென்னையில் கு.டி.போ.தை.யில் கார் ஓட்டிய திரையரங்கு மேலாளர்..! இளம்பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்..!

சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (21). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இன்று மதியம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை எதிரே உள்ள பர்ணபி சாலைக்குச் செல்ல சாலையை கடந்தபோது ஈ.வே.ரா பெரியார் சாலை வழியாக வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் யமுனா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த யமுனாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் ர.த்.த.ப்போ.க்கு அதிகம் ஏற்பட்ட நிலையில் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிற்காமல் வேகமாக அருகில் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை வழியாக செல்ல முற்பட்டபோது, பொதுமக்கள் காரை மடக்கி பிடித்தனர்.

அளவுக்கு அதிகமான ம.து.போ.தை.யில் காரை ஓட்டி வந்த அப்துல் கவுஹீம் என்பவரை அடித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் கவுஹீமிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய அப்துல் கவுஹீம் சங்கம் திரையரங்கத்தின் மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Archana
Archana

Recent Posts

பாட்ஷா படம் சூப்பர்ஹிட் தெரியும்… ஆனா அந்த படத்தால ஒருத்தருக்கு அமைச்சர் பதவி போனது தெரியுமா?

கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட்…

25 mins ago

அந்த பட கதையை ஏன் என்கிட்ட சொல்லலைன்னு ஆதங்கம் இருந்துச்சு.. பேட்டியில் ஓபனாக சொன்ன தனுஷ்.. எந்த படம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தாலும்…

31 mins ago

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்.. குடும்பத்தினர் சொன்ன பகிர் தகவல்..!

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிஹார்…

1 hour ago

இளையராஜாவைப் பார்த்து ‘நீ அதிர்ஷ்டக்காரன்டா’ என சொன்ன கண்ணதாசன்… அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு சோகமான காரணமா?

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…

1 hour ago

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

2 hours ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

3 hours ago