தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா என்ற அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் மீரா தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடனே அவரை ஆழ்வார்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயதான மீரா திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவரது தற்கொலை குறித்து சென்னை தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நேரில் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்த விசாரணையை தேனாம்பேட்டை போலீசார் தற்போது தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி இல்லத்திற்கு தடைய அறிவியல் துறையினர் நேரில் வந்து சோதனை நடத்தினர். தற்கொலை நடந்த இடத்தில் ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா என்று சோதித்தனர். மேலும் தற்கொலை எப்படி நடந்தது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்துள்ள நிலையில் தற்போது விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் போலீசார் மீராவுடன் படித்த பள்ளி மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக…
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா. 3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…
தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிகை அக்ஷயா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் அக்ஷயா மகா…
தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…