Categories: CINEMA

ஆமா எனக்கும் நடந்திருக்கு.. அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து முதன்முறையாக மனம் திறந்த பாண்டவர் சீரியல் நடிகை…

பாண்டவர் இல்லம் சீரியல் மூலமாக பிரபலமான ஆர்த்தி சுபாஷ் தனக்கு சினிமா துறையில் ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கின்றார்.

youtube-களில் வெளியாகும் வெப் சீரியஸ்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி. அதன் பிறகு ஆதித்யா டிவியில் ஆங்கராக பணியாற்றத் தொடங்கினர். இதன் மூலமாக இவருக்கு பாண்டவர் இல்லம் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் சென்னை மீம்ஸ் என்ற youtube சேனலில் சம்சாரம் அது மின்சாரம் என்ற சீரியஸிலும் நடித்திருக்கின்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டவர் இல்லம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். பாண்டவர் இல்லம் சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கின்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வருகின்றார்.

பாண்டவர் இல்லம் சீரியலில் லீட் ரோல் கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களுடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அந்த கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள். சமீபத்தில் இவர் தனது ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பற்றி பகிர்ந்திருந்தார் அதாவது காலேஜ் படிக்கும் போது பார்ட் டைமாக தான் நடிக்க தொடங்கினேன். தனக்கு பாக்கெட் மணிக்கு பணம் வருகிறது என ஜாலியாக நடிக்க தொடங்கினேன். இப்படி ஆரம்பித்த எனது கெரியர் ஒரு கட்டத்தில் ஸ்ட்ரெஸ் ஆக ஆரம்பித்த நிலையும் உண்டு.

ஒரு வேலையை வேலையாக செய்யும்போது அதில் இருக்கும் அழுத்தம் என்பதை உணர்ந்தேன். ஓவர் டைமில் வேலை பார்ப்பது, உணவு இல்லாமல் வேலை பார்ப்பது என்ற நிலை எல்லாம் உருவானது இப்படி பல கஷ்டங்களை சந்தித்தேன். சில நேரங்களில் அதிக கோபத்தில் காருக்குள் பயங்கரமா கத்தி கூச்சலிட்டு இருக்கிறேன்.

மேலும் மீடு போன்ற புகார்களில் சிக்கி உள்ளீர்களா என என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருந்த ஆர்த்தி எனது வாழ்க்கையிலும் அது போன்ற நிறைய நடந்துள்ளது. இல்லை என்று சொன்னால் அது பொய். கண்ணுக்கு முன் நிறைய பேர் பண்ற தப்புகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் பார்த்தும் பாக்காதது போல் கடந்து சென்று விடுகிறோம். யாருமே யாரையும் கட்டாயப்படுத்தி செய்ய சொல்வது கிடையாது. எல்லாம் அவங்க இஷ்டத்துக்கு தான் நடக்கின்றது. நான் யாருடைய வாழ்க்கையிலும் பெரிதாக தலையிட்டு கொள்ள மாட்டேன். அது எனக்கு பிடிக்காத ஒன்று” என்று அவர் பேசி இருந்தார்

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

நயன்தாராவை choose பண்ணது தான் நான் பண்ண பெரிய தப்பு.. வருத்தப்பட்டு பேசிய தனுஷ் படம் இயக்குனர்..!

நடிகை நயன்தாராவை வைத்து அந்த படத்தை எடுத்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிரபல இயக்குனர் பேசியிருப்பது தற்போது…

7 மணி நேரங்கள் ago

பிரதீப் ரங்கநாதனை வைத்து விட்ட இடத்தை பிடிக்க முயன்ற விக்னேஷ் சிவன்.. கடைசில இப்படி ஆயிடுச்சே..!!

லவ் டுடே படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன்…

8 மணி நேரங்கள் ago

தனது படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி சென்று திருமணம் செய்த பிரபல நடிகர்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…

8 மணி நேரங்கள் ago

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

8 மணி நேரங்கள் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

9 மணி நேரங்கள் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

10 மணி நேரங்கள் ago