Categories: CINEMA

ஹீரோ ஹீரோயினே இல்லாமல் டூயட் பாடலை படமாக்கிய ஜெயம் ரவியின் தந்தை!! பெரிய வித்தைக்காரரா இருப்பாரு போலயே?

ஜெயம் ரவியின் தந்தையான மோகன், தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்ற படத்தொகுப்பாளராக திகழ்ந்தவர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார்.

அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு தமிழில் “ஒரு தொட்டில் சபதம்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். அத்திரைப்படத்தில் ராம்கி, சீதா ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின் ஓரு பாடல் காட்சியை மட்டும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த மோகன், ராம்கியை தொடர்புகொண்டு விஷயத்தை கூறினார்.

அதற்கு ராம்கி, “நான் அடுத்த இரண்டு நாட்கள் மட்டுமே சென்னையில் இருப்பேன். அதற்கு அடுத்த நாள் வேறு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் செல்கிறேன்” என்று தனது நிலையை கூறியிருக்கிறார். அதன் பின் சீதாவையும் தொடர்புகொண்டபோது, “நான் ஆந்திராவில் வேறொரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். நான் சென்னை வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும்” என்று கூறியிருக்கிறார்.

“ஒரு தொட்டில் சபதம்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டு அந்த வெளியீட்டு தேதியும் நெருங்கிகொண்டிருந்தது. இந்த இக்கட்டான சூழலில் என்ன செய்யலாம் என சிந்தித்த மோகன், அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான அஷோக்கையும் நடன இயக்குனரான ஜான் பாபுவையும் அழைத்தார்.

“நாம் நாளை ஒரு பாடல் காட்சியை படமாக்கப்போகிறோம். இப்போது ராம்கி இரண்டு நாட்கள் மட்டுமே சென்னையில் இருப்பார். சீதா மூன்று நாட்கள் கழித்துதான் சென்னைக்கே வருகிறார். ஆதலால் முதலில் ராம்கியை வைத்து அந்த பாடலை படமாக்கிவிடுவோம். சீதாவுக்கு பதில் ஒரு டூப்பை நடிக்க வைப்போம்.

அதன் பின் சீதா சென்னை வந்த பிறகு “சீதாவை வைத்து படமாக்கி ராம்கிக்கு பதில் டூப் போட்டுவிடுவோம்” என்று கூறினாராம். அதற்கு அந்த இருவரும் “இது சரியாக வருமா?” என்று சந்தேகப்பட்டார்களாம். அதற்கு மோகன், “நீங்க கவலைப்படவே வேண்டாம். நீங்க படமாக்கி மட்டும் கொண்டு வாங்க. நான் எடிட்டிங்க்ல பாத்துக்குறேன்” என்று திடமாக கூறினாராம்.

அந்த பாடலை படமாக்கிய பிறகு மோகன் அந்த பாடலை எந்த வித சந்தேகமும் வராதபடி தொகுத்திருந்தாராம். நிஜமாகவே இருவரும் சேர்ந்து அந்த பாடல் காட்சியில் இடம்பெற்றது போல் அவ்வளவு கச்சிதமாக தொகுத்திருந்ததாராம். “ராத்திரி நேரத்திலே” என்று தொடங்கும் அந்த பாடலுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

6 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

6 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

7 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

7 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

8 hours ago