நடிகர் விஜய்யினுடைய 68 வது படம் பற்றின பேச்சு தான் தற்போது இணையங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது விஜய் நடிப்பின் மீது அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார். ஒரு படம் முடிந்த கையோடு அப்படம் வெளியாவதற்கு முன்பே தனது அடுத்த படத்திற்கான கால்ஷீட் கொடுத்து அதில் நடிக்கவும் தொடங்கி வருகிறார். போன வருடம் மட்டுமே அவருக்கு வாரிசு, லியோ என இரு படங்கள் வெளியான நிலையில் லியோ படம் வெளியாவதற்கு முன்பே தனது 68 வது படத்தில் கமிட் ஆகிவிட்டார் நடிகர் விஜய். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், ரம்யா கிருஷ்ணன், சினேகா உட்பட பலர் நடிப்பில் அவரது 68வது படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய விஜய், விஜயகாந்தினுடைய மறைவில் கலந்து கொண்ட பிறகு, திருநெல்வேலிக்கு சென்று அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது படக்குழு இலங்கையில் முகாமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தினுடைய தலைப்பு வெளியானது. இரு மாறுபட்ட வேடத்தில் விஜய் இரண்டு புறமும் நிற்க, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என படத்தின் பெயரும் போஸ்டரும் வெளியிடப்பட்டது. போஸ்டர் வெளியானதில் இருந்தே ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
ஏனெனில் இப்படம் சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் ட்ராவல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் போஸ்டர் வெளியான பிறகு ஹாலிவுடில் வெளியாகியுள்ள ஜெமினி மேன் படத்தினுடைய ரீமைக்காக கூட இப்படம் இருக்கலாம் என பலரும் பேசி வருகின்றனர். இதற்கு படக் குழு எவ்வித மறுப்பும் தெரிவிக்காத நிலையில் பல பத்திரிக்கையாளர்களும் கூட ஜெமினி மேன் படத்தைப் போன்று தான் இப்படமும் இருக்கும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்படத்தில் இரண்டு விஜய் மட்டுமல்லாது மூன்றாவதாக ஒரு விஜய் இருப்பதாகவும் அவரை சஸ்பென்ஸ் ஆக ரசிகர்கள் திரையில் பார்த்துக் கொள்ளும்படி வைத்திருப்பதாகவும் கூட கூறப்படுகிறது. ஏனெனில் ஜெமினி மேன் படத்தில் வில்ஸ் ஸ்மித் கூட மூன்று கதாபாத்திரங்களில் அப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தைப் போலவே இப்படமும் இயக்கப்படுகிறது என்றால் மூன்றாவது ஆக ஒரு விஜய் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்பதால் மூன்று விதி இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் தொடர்ந்து விஜய் ஆங்கில தலைப்புகளை கொண்ட படங்களில் நடித்து வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர், பிகில், லியோ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்பொழுது கோட் என ஆங்கிலத்தில் தலைப்பு இருக்கக்கூடிய படத்தில் விஜய் நடித்து வருவது தமிழில் அவருக்கு பற்று இல்லையா? என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. ஆகையால் இவைகள் குறித்து பட குழுவினர் வாய் திறந்தால் மட்டுமே உண்மை நிலவரங்கள் வெளிவரும்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…