நடிகர் அஜீத்குமார், ஆச்சி என தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் மனோரமாவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். தனிப்பட்ட முறையிலும், அவர் மீது அதிக பாசம் கொண்டவர் அஜீத்குமார். ஆச்சி மனோரமாவும் அஜீத் மீது பிள்ளை பாசத்தை வெளிப்படுத்துவார். அதனால் எங்கு பொது நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சியில் பார்த்தாலும் ஆச்சி மனோரமாவிடம் சென்று அன்பு ததும்ப பேசிவிட்டு வருவதுதான் அஜீத்குமாரின் வழக்கம்.
இந்நிலையில் முதுமை காரணமாக ஆச்சி மனோரமா இறந்தார். அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த நடிகர் அஜீத்குமார், தனது மனைவி ஷாலினியுடன் மனோரமாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது, முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததால், அஜீத்குமார் கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு, தரையில் ஊன்றியபடி மிகவும் சிரமத்துடன் அங்கு சென்றிருந்தார். அப்போது மனோரமா வீட்டருகே இருந்த ரசிகர் கூட்டம், அஜீத்குமார் அருகே வர முண்டியடித்து, திரண்டு வந்த கூட்டத்தில் ஷாலினியுடன் சிக்கிக்கொண்டார் அஜீத்குமார்.
அங்கிருந்த சுரேஷ் சந்திரன்தான், அஜீத்குமாரை அந்த பெருங்கூட்டத்தில் இருந்து காப்பாற்றி, பாதுகாத்து பத்திரமாக அஜீத்குமாரை, ஷாலினியை காரில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார். இதில் அவரது சண்டை கிழிந்து, மண் தரையில் விழுந்து பலவிதமான சிரமங்களை சந்தித்திருக்கிறார். இந்த தகவலை கூறிய வலைப்பேச்சு அந்தணன், அதன்பிறகுதான் சினிமா துறையினர், நெருக்கமானவர் என எந்த இறப்பு நிகழ்ச்சியிலும், பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என்ற முடிவுக்கு அஜீத்குமார் வந்தார் என, அந்த நேர்காணலில் அந்தணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…