ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் மற்றும் நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக் அம்பரீஷ் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
சுமலதாவின் மகனான அபிஷேக் அம்பரீஷ் ஆடை வடிவமைப்பாளரான அவிபா பிடாவா என்பவரை மணம் முடித்துக் கொண்டார்.
இவர்களின் திருமணம் நேற்று காலை 9:30 மணி அளவில் பெங்களூரில் உள்ள சாம்ரவஜ்ரா என்ற அரண்மனை மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அபிஷேக் அம்பரீஷ் நீண்ட நாட்களாக அவிவாவை காதலித்து வந்த நிலையில் திருவிட்டார் சம்மதத்துடன் கவுடா பாரம்பரிய முறைப்படி திருமணம் முடித்தார்.
இவர்களின் திருமணத்தில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
அதன்படி முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் அம்பரீஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.
இவர் ரஜினியுடன் இணைந்து தாய் மீது சத்தியம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
அதனைப் போலவே அம்பரீஷ் மனைவி நடிகை சுமாலதா ரஜினியுடன் முரட்டுக்காளை என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்ற பிரம்மாண்டமாக நடந்து முடிந்த அம்பரீஷ் மற்றும் நடிகை சுமலதா தம்பதியின் மகன் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…
தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…
ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…