தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் இறுதியாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களையே பெற்றது. தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.
‘குஷி’ திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டிஷ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு மேலாக சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார்.
அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அங்கு மக்களோடு மகளாக அமர்ந்து தியானம் செய்துள்ளார் நடிகை சமந்தா. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…