Categories: NEWS

பரம ஏழையான மீனவன் !! கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் பல கோடிக்கு அதிபதி !! அப்படி என்ன பொருள் தெரியுமா ??

தாய்லாந்தில் பரம ஏழையான மீனவர் ஒருவர் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கில வாந்தியால் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.அந்த மீனவருக்கு கிடைத்திருப்பது, உலகில் இதுவரை யாருக்கும் கிடைத்திராத மிக அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது.தாய்லாந்தின் தென் பகுதியில் வசிப்பவர் 60 வயதான மீனவர் Naris Suwannasang. இவருக்கே தற்போது சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது.அம்பெர்கிரிஸ் என அறியப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்றே பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏழை மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தமது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் நடக்க சென்றுள்ளார்.அப்போது ஒரு பகுதியில் பாறை போன்ற வெளிர் நிற கட்டிகள் கரை ஒதுங்கிக் கிடந்துள்ளது. ஒரு சந்தேகத்தின் அடிப்படையில், தமது உறவினரின் உதவியால், அந்த மொத்த கட்டிகளையும் அவர் சேகரித்து குடியிருப்பு கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அது என்னவென்று தெரியாத அந்த மீனவர், சிலரிடம் விசாரித்ததில், தமக்கு கிடைத்திருப்பது மிதக்கும் தங்கம் என்பதை அறிந்து கொண்டார்.சுமார் 100 கிலோ அளவுக்கு அந்த கட்டிகள் உள்ளன. தற்போது தொழிலதிபர் ஒருவர், அதன் தரத்திற்கு தகுந்தாற்போல் கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலையாக தரலாம் என மீனவரிடம் கூறியுள்ளார்.

மாதம் 500 பவுண்டுகள் கூட ஈட்ட முடியாத பரம ஏழையான மீனவருக்கு தற்போது சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப் போகிறது.இதனிடையே, தமக்கு கிடைத்துள்ள அம்பெர்கிரிஸ் கட்டிகளின் தரம் தொடர்பில் நிபுணர்கள் மூலம் சோதிக்க மீனவர் நரிஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Archana
Archana

Recent Posts

“என் வாழ்க்கையில அவர் கூட படமே பண்ணமாட்டேன்”.. வாய வச்சிட்டு சும்மா இல்லாம இயக்குனர் ஹரியை சீண்டிய ஸ்ரீகாந்த்!

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

2 hours ago

இந்த படம் பிடிக்கல.. ஆனா நீங்க இதப் பண்ணுங்க – ராஜ்கிரணின் முதல் படத்தை அட்வைஸ் செய்த கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள்.  சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…

3 hours ago

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

14 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

16 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

16 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

16 hours ago