பெண்களுக்கு குட் நியூஸ்!.. மகளிர் உரிமைத் தொகை ₹2,500… வந்தது புதிய அப்டேட்..!!

By Muthu Mani on வைகாசி 22, 2026

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தும் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மேலும் மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் முழு வடிவத்தையும் நிர்வாக ரீதியாக மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தற்போது தீவிர பரிசீலனையில் உள்ளதே இந்த காலதாமதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, தற்காலிக ஏற்பாடாக தகுதியுள்ள பெண்களுக்கு பழைய முறைப்படியே மாதந்தோறும் 1,000 ரூபாய் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அதேவேளையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை விடுபட்ட மற்றும் புதிதாக விண்ணப்பிக்கக் காத்திருக்கும் தகுதியான பெண்களை இணைக்கும் பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிர்வாக மாற்றங்கள் ஒருபுறம் நடந்தாலும், புதிய பயனாளர்களைச் சேர்க்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.