கணவர் புதிய காரில் பயணம் செய்யச் சென்ற நிலையில், கோபமடைந்த மனைவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஸ்டார்நெட் காலனியில் வசித்து வரும் சர்வேஷ் ராயின் மனைவி சுமன் ராய்(22) . இவர் ஏப்ரல் 2024 இல் சர்வேஷை மணந்தார். இந்நிலையில் இந்த புதுமணத் தம்பதியின் மரணத்திற்கு புதிய கார் காரணமாக அமைந்தது. புதிய காரை டெலிவரி செய்த பிறகு கிராமத்திற்கு ஓட்டிச் செல்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உயிரிழந்தார். கார் வாங்க இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கத் தவறியதால், தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு தூக்குப்போடப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமனின் பெற்றோர் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள உதய்புரா கிராமத்தில் வசிக்கின்றனர். அவர் . குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, சர்வேஷ் இன்று ஒரு புதிய காரை வாங்கியிருந்தார். ஒரு புதிய கார் வாங்கிய பிறகு, அவர் தனது மனைவியை தனது கிராமத்திற்குச் செல்லச் சொன்னார், ஆனால் அவர் தனது மூதாதையர் கிராமத்திற்குச் செல்ல மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்.
