“நான் தான் நவீன கால இயேசு”… வெள்ளை மாளிகை அருகே வாலிபர் செய்த அதிரடி காரியம்… இறுதியில் நேர்ந்த சோகம்…!

Spread the love

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையின் பாதுகாப்புச் சாவடிக்கு வெளியே உள்ள 17-வது தெரு நார்த்வெஸ்ட் பகுதியில், நாசிரே பெஸ்ட் (21) என்ற இளைஞர் சந்தேகத்திற்குரிய வகையில் விசித்திரமாக நடந்து கொண்டுள்ளார். அவரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்த போதே, திடீரென தனது துப்பாக்கியை எடுத்து அவர் சரமாரியாகச் சுடத் தொடங்கினார். இந்த எதிர்பாராத தாக்குதலில் அங்கிருந்த பொதுமக்கள் ஒருவரது உடலில் தோட்டாக்கள் பாய்ந்து, அவர் படுகாயமடைந்தார். உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்ச் சூட்டில் நாசிரே பெஸ்ட் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

உயிரிழந்த நாசிரே பெஸ்ட் கடுமையான மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என்பதும், தன்னை “இயேசு கிறிஸ்துவின் மறு அவதாரம்” என்று நம்பி வந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டே வெள்ளை மாளிகையின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தது போன்ற குற்றங்களுக்காக வாஷிங்டன் போலீசாரால் அவர் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அதிகாரிகளிடம் பேசிய அவர், தான் வேண்டுமென்றே கைது செய்யப்பட விரும்புவதாக உளறியுள்ளார். இதன் காரணமாக, வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழையக் கூடாது என நீதிமன்றம் அவருக்கு ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையிலும், அந்த உத்தரவை மீறி தற்போது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்காவின் முன்னணி புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த எஃப்.பி.ஐ அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா அல்லது முழுக்க முழுக்க மனநல பாதிப்பால் மட்டுமே இது நடந்ததா என்ற கோணத்தில் ஆராய்ந்து வருகின்றனர். முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் அடுத்தகட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு முறையாக வெளியிடப்படும் என்று எஃப்.பி.ஐ தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் ஒருமுறை துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் பொதுவாகவே துப்பாக்கிகளை வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லாததால், யார் வேண்டுமானாலும் எளிதாக ஆயுதங்களைப் பெறும் சூழல் நிலவுகிறது. நீதிமன்றத் தடையும் கடுமையான மனநலப் பாதிப்பும் கொண்ட ஒரு வாலிபரின் கைகளில் எப்படித் துப்பாக்கி கிடைத்தது என்ற கேள்வி, அங்குள்ள சட்ட குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய தளர்வான விதிகளே அமெரிக்காவில் தொடர்ந்து அரங்கேறி வரும் பல கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு முதன்மைக் காரணமாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Nanthini

Recent Posts

“அப்போ அப்படி.. இப்போ இப்படி.. அப்படியே தலைகீழா மாறிட்டாரே”.. இணையத்தை உலுக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் அந்த ‘சிரிப்பு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…

2 minutes ago

வீட்டு வாசலில் காத்திருந்த மரணம்.. 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வழக்கறிஞர்.. ஸ்கார்பியோ கார் ஏற்றி படுகொலை.. பின்னணியில் உள்ள ‘அந்த’ விவகாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…

14 minutes ago

சுற்றுச்சூழல் துறையா..? சுற்றுலாத்துறையா..? தனக்கே என்ன துறைன்னு தெரியலையா..? செய்தியாளர் சந்திப்பில் சொதப்பிய TVK அமைச்சர்..!

தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…

36 minutes ago

“2 மணி நேர இருள்.. அலறிய ICU நோயாளிகள்..! அதிரடி உத்தரவிட்ட மின்வாரியம்…!”

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…

39 minutes ago

அட கடவுளே..! நாட்டை உலுக்கும் கோடை வெயில்.. ஒரே நாளில் 40 பேரை பலிவாங்கிய ஹீட்ஸ்ட்ரோக்.. வானிலை மையம் அவசர எச்சரிக்கை…!

இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட…

48 minutes ago

முதுகில் சவாரி செய்துவிட்டு, முதுகிலே குத்திவிட்டார்கள்..! காங்கிரஸை இனி சேர்க்கவே கூடாது.. அண்ணா அறிவாலயத்தில் கொதித்த உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும்,…

48 minutes ago