சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூமில் தங்கி விடுகிறார். அவரை தேடி முத்து சாப்பாடு கொண்டு செல்கிறார். வீட்டில் ரோகிணி தனியாக சாப்பிடாமல் இருப்பதை பார்த்து மீனா சாப்பாடு செய்து கொடுக்கிறார். ஆனால் இருவரும் சொல்லி வைத்தார் போல முத்து மீனாவையே குறை சொல்லுகின்றனர். உங்களால் தான் பிரச்சனை என்று கூறுகிறார்கள். அவர்கள் தவறு செய்வதையே அவர்கள் இன்னும் உணரவில்லை. அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் கதவை பூட்டிக்கொண்டு இருக்கிறார். ஷோரூமில் இருந்து காலை விடிந்தவுடன் மனோஜ் வீட்டுக்கு வருகிறார். அப்போது வெகு நேரம் கதவு தட்டியும் ரோகினி திறக்கவில்லை. வெகு நேரம் கழித்து வருகிறார். விஜயா திட்டுகிறார் என்ன ஏன் இவ்வளவு நேரம் திறக்கல என்று கேட்கிறார். சாரி ஆன்டி நான் நல்லா தூங்கிட்டேன் என்று ரோகினி சொல்லும்போது இங்கே எல்லாரையும் தூங்க விடாம பண்ணிட்டு உனக்கு தூக்கம் கேட்கிறதா என்று கூறிவிட்டு மனோஜ் உள்ள போய் குளிச்சோமா வந்தோமானு இருக்கனும் என்று திட்டி அனுப்புகிறார்.
அடுத்ததாக மீனா கிச்சனில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது முத்து அங்கே வருகிறார் என்ன பேக் பண்ற என்று கேட்கிறார். இல்ல இன்னைக்கு மாமா வேலைக்கு போவாங்க அதான் அவங்களுக்காக லன்ஞ்ச் பேக் பண்றேன் என்று சொல்லுகிறார். அடுத்ததாக மீனா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனுங்க நேத்து சத்யாவை பார்த்தேன் ரோகிணி வந்து சத்தியா ஓட உன் பிரண்டு ஒருத்தன் சிட்டி இருந்தால்ல அவன் ஆபீஸ்க்கு ரெண்டு மூணு டைம் வந்து இருக்காங்க அவன்கிட்ட வட்டிக்கெல்லாம் கடன் வாங்கி இருக்காங்கன்னு வேற சொல்றான் என்னன்னே புரியலங்க இவங்க கடன் எதுக்கு வாங்குறாங்க அது கூட உங்க அண்ணனுக்கு தெரியுமோ தெரியாதோ தெரியலையே என்று மீனா கூறுகிறார்.
உடனே முத்து என்ன இப்படி சொல்ற என்னமோ இதுல பெரிய வில்லங்கம் இருக்கும் போல இருக்கு அது என்னன்னு முதல்ல கண்டுபிடிக்கணும். இந்த பார்லர் அம்மாவை நம்பவே முடியல என்று கூறுகிறார். அடுத்ததாக ரோகினி அண்ணாமலை இடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். அதற்கு அண்ணாமலை மனோஜ் முன்னேறனும்னு நீ செய்யறது எல்லாம் சரிதாமா ஆனா நீ இப்படி பணத்த மறைக்கக்கூடாது அது வந்து எல்லாருக்கும் பொதுவானது அதனால தான் அவங்க கோபப்படுறாங்க. வீட்டுக்கு மூத்த மருமகள் நீ உனக்கு நிறைய பொறுப்பு இருக்கு அதை நினைச்சு நீ நடந்துக்கணும் நீ இப்போ பொறுமையா இரு அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு அவர் வேலைக்கு கிளம்பி விடுகிறார்.
அனைவரும் சாப்பிட உட்காரும்போது ரோகிணி தனியா இருக்கிறார். ரோகினி வாங்க சாப்பிடலாம் என்று சுருதி கூப்பிட்டு உட்கார வைக்கிறார். ஆனால் விஜயா ரோகினியை எழும்ப சொல்லி சாப்பிடக்கூடாது என்று கூறிவிட்டார். உடனே மனோஜ் இந்த வீட்ல இவங்களால தான் பிரச்சனை அப்படின்னு ஜாடையாக muththu மீனாவை பேசுகிறார். உடனே கோபப்பட்ட மீனா என்ன எங்களால பிரச்சனையா அவங்க அவங்க பண்ணின தப்பு எல்லாருமே மறந்துடறாங்க எங்களை தான் கடைசில பழி போடுறாங்க. நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க ரோகிணி என்று கோபத்துடன் கூறுகிறார்.
உடனே விஜயா என்ன நீ பண்ணிட்டு இருக்க நான் சாப்பிட கூடாதுன்னு சொல்றேன் நீ என்ன இங்க ஆர்டர் போட்டுட்டு இருக்க என்று கூறுகிறார். உடனே ரோகினி எனக்காக யாரும் சண்டை போட வேண்டாம் நான் இங்க சாப்பிடல அப்படின்னு கிளம்பி வெளியே போய் விடுகிறார். நேராக பார்வதி வீட்டுக்கு செல்கிறார். பார்வதியிடம் மனதில் இருப்பதை சொல்லி அழுகிறார். மனோஜின் நல்லதுக்காக தான் நான் எல்லாம் பண்ணினேன், ஆன்ட்டி என்னை புரிஞ்சுக்கவே இல்ல பிசினஸ் ஆரம்பிச்சு அதுல பிராஃபிட் வந்தவுடனே பணத்தை எல்லாத்துக்கும் கொடுத்தரலாம் தான் நாங்க நினைச்சோம் என்று சொல்லி அழுகிறார்.
உடனே பார்வதி அவளுக்கு மூணு ஆம்பள பசங்க அதனால அவளுக்கு பொம்பள பிள்ளைங்க அருமை தெரியல. அவ வந்து பாசம் வச்சா நிறைய வச்சுடுவா கோபம் வந்தாலும் அப்படித்தான் வரும். நீ பொறுமையா இரும்மா எல்லாம் சரியா போயிடும் என்று சமாதானப்படுத்தி அனுப்புகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.