Connect with us

அந்த நடிகரை நடிக்க வைத்ததால் சுந்தர் சி படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு.. குஷ்பு கெஞ்சியும் பிடிமானம் ஆகாத மனுஷன்..

CINEMA

அந்த நடிகரை நடிக்க வைத்ததால் சுந்தர் சி படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு.. குஷ்பு கெஞ்சியும் பிடிமானம் ஆகாத மனுஷன்..

 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தன்னுடைய நடிப்பால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். பல வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு , நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இறுதிப்படமான மாமன்னன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் வடிவேலு குறித்து தொடர்ந்து பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.  இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பெரிய ஜாம்பவானாக வளர்ந்தாலும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு தற்போது வரை அவருக்கு இருந்தாலும், பல பேரின் வாழ்க்கையில் இவர் பல தவறான விஷயங்களை செய்து சினிமா வாழ்க்கையை காலி செய்துள்ளார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இவர் ஒரு படத்தில் நடிக்கும் தன் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், கூட நடிக்கும் சக நடிகர்களின் கதாபாத்திரத்தை மட்டம் தட்டும் விதமாக பல விஷயங்கள் செய்துள்ளார் என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

   

சொல்லப்போனால் இவர் நடிக்கும் கதாபாத்திரம் மட்டும்தான் மக்களிடம் சேர வேண்டும் என்றும், மற்ற யார் அந்த படத்தில் நடித்திருந்தாலும் அவர்கள் பேர் வெளியே தெரியக்கூடாது அளவிற்கு வடிவேலு அவர்கள் செய்து விடுவாராம். அதே போல் தான் சுந்தர் சி அவர்களின் படத்தில் சந்தானம் மற்றும் வடிவேலு இணைத்து நடிக்க வைத்துள்ளாராம். ஆனால் முதலில் வடிவேலு கால்சிட்டை வாங்கி எடுக்க வேண்டிய படப்பிடிப்பை முழுமையாக எடுத்து முடித்துவிட்டு வடிவேலை அனுப்பி வைத்த பின், அவருக்கு தெரியாமல் சந்தனம் அவர்களை அழைத்து இவருக்கான ஷூட்டிங் போர்ஷனை தனியாக சூட் செய்து எடுத்துள்ளாராம். பின்னர் முழுமையாக படம் எடிட் செய்து தயாரான பின் வடிவேலு பார்த்தாராம்.

தன்னைத் தாண்டி சந்தானத்திற்கு சம உரிமை கொடுத்து நடிக்க வைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் சுந்தர் சி யின் அடுத்த படத்திற்கு நடிக்க மறுத்தலித்து விட்டாராம். எவ்வளவு கேட்டும் முடியாது என்று சொல்லி இருக்கிறார். குஷ்பூ அவர்களும் இதற்காக இறங்கி பலமுறை கேட்டு உள்ளார்களாம், ஆனால் தற்போது வரை சுந்தர் சி யின் படத்தில் அவர் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்று தகவல் தெரிய வந்துள்ளது. தற்போது வரை வடிவேலு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கமும், மற்ற நடிகர்களை மதிக்காமல் அவர்களை கரியரை காலி செய்யும் அளவிற்கு செய்து வருகிறார் என்று பலரும் இவரை விமர்சித்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top