டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து, உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரத்தீஷும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தை இயக்கும் முதன்மை அதிகார மையமாக ரத்தீஷ் செயல்பட்டதற்கான வலுவான ஆதாரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை திரட்டியுள்ள நிலையில், விரைவில் தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே அவரைப் பிடியில் கொண்டுவந்து தீவிர விசாரணை நடத்தத் புலனாய்வுத் அமைப்பு ஆயத்தமாகி வருகிறது.
அடுத்தடுத்து வெளிவரும் இந்த அதிரடித் திருப்பங்கள், ஆளும் திமுக அரசுக்கும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரும் அரசியல் நெருக்கடியையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளன.
