ஒரே வீட்டில் அரங்கேறிய கொடுமை.. “எங்களை காப்பாத்துங்க” உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கதறும் இரண்டு சகோதரிகள்… புகுந்த வீட்டில் செய்த கொடுமை..!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் தாத்ரி பகுதியில் உள்ள சிதேரா கிராமத்தைச் சேர்ந்த சோனம் பைஸ்லா மற்றும் மோனிகா பைஸ்லா ஆகிய இரு உடன்பிறந்த சகோதரிகளுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில காலத்திலேயே, கூடுதல் வரதட்சணை கேட்டு இவர்களது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் தங்களை கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதாக அச்சகோதரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இரு சகோதரிகளும் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், தங்கள் புகுந்த வீட்டினர் வரதட்சணை வெறி பிடித்தவர்கள் என்றும், எந்த நேரத்திலும் தங்களை அவர்கள் கொலை செய்யக்கூடும் என்றும் பயத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டில் உள்ள சிசிடிவி ஆதாரங்களை அழிப்பதற்காக டிவிஆர் (DVR) பெட்டியையும் அவர்கள் அகற்றிவிட்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் நீதி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர் லக்ஷ்மி சிங் ஆகியோருக்கு கைகூப்பி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து தாத்ரி பகுதி உதவி காவல்துறை ஆணையர் (ACP) பிரஷாலி கங்வார் கூறுகையில், குடும்பத் தகராறு காரணமாக பெண்களின் கணவர்கள் தற்போது தனியாக வசித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பும் இந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் தாத்ரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இந்த வீடியோ குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

5 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

5 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

6 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

6 மணத்தியாலங்கள் ago