சென்னை பல்லாவரம் அருகே, கள்ள உறவில் ஏற்பட்ட மோதலால் செல்வக்குமார் என்ற 22 வயது இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். திருமணமான ரீனா என்ற பெண்ணுடன் பழகி வந்த அவர், ரீனாவின் தோழி ரஜிதாவிடமும் அத்துமீறி நடந்துள்ளார். இருவரும் தங்களைச் சந்திக்க வேண்டும் என செல்வக்குமார் அடிக்கடி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட அந்த இளம்பெண்கள் முடிவு செய்தனர். இதற்காகத் திட்டம் தீட்டி ஆசை வார்த்தை கூறி வரவழைத்து, தங்களது ஆண் நண்பர்கள் மூலம் செல்வக்குமாரை ஆணுறுப்பு, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டிச் சாய்த்தனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த செல்வகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, ரீனா மற்றும் ரஜிதா உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களை மயக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த திடுக்கிடும் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய மேலும் மூன்று பேரைத் தேடி வரும் காவல்துறை, இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்கள் கூலிப்படை ஏவிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…