தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, கோவையில் சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவமும், சென்னையில் கானா பாடகர்கள் இரட்டைக் கொலையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்களை முன்வைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இதற்கிடையே, தவெக அரசின் இந்த ஆரம்பகால செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கேப்ரியல் தேவதாஸ் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். முந்தைய திமுக அரசுக்கு ஐந்து ஆண்டுகளில் உருவான ஆட்சி எதிர்ப்பு அலை, தற்போதைய தவெக அரசுக்கு மிக வேகமாகக் கிளம்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் சம்பவங்கள் இதே வேகத்தில் தொடர்ந்து நீடித்தால், தவெக அரசு வெறும் ஓராண்டிற்குள்ளாகவே மக்கள் மத்தியில் கடுமையான ஆட்சி எதிர்ப்பு அலையைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்னும் அமைதியடையாத நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள…
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய அரசியல் அதிரடிகள்…
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு…
உலகப் புகழ்பெற்ற 'ரிச் டாட் புவர் டாட்' (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி, நிதிச்…
பஞ்சாப் அண்ட் சிண்ட் வங்கியில் காலியாக உள்ள 635 அப்ரென்டிஸ் (தொழில் பழகுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின்…
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், 'பிரிகாபாலின்' (Pregabalin) மருந்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு, அதை 1945-ம்…