தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் செந்தமிழ் (19) என்பவருக்கும் அங்கு வசித்து வரும் அக்காள் தங்கையான +2 மாணவிகள் இருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பேசி பழகிய இவர்கள் சில நாட்களில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் whatsapp வீடியோ காலிலும் பேசியுள்ளனர். அப்போது அந்த மாணவிகளை சரவணன் மற்றும் செந்தமிழ் இருவரும் நிர்வாணம் ஆக நிற்க சொல்லி வீடியோ காலில் படம் பிடித்ததாக தெரிகின்றது.
பிறகு அந்த ஆபாச படங்களை காட்டி தாங்கள் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என்று அவர்களை மிரட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஆபாச வீடியோவை தன் நண்பர் வெங்கடேஷ் என்பவருக்கு அனுப்பியுள்ளனர். வெங்கடேஷ் அந்த படங்களை whatsapp குழுவில் பகிர்ந்து உள்ளார். இந்த ஆபாச படங்கள் whatsapp குழுவில் பரவி வருவதை அறிந்த அந்த மாணவியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மாணவிகளின் தந்தையிடம் கூறிய நிலையில் மாணவிகளை அழைத்துச் சென்ற தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
