என் கணவரின் இன்ஸ்டாகிராமை நான் ஃபாலோ பண்ணல.. அதுக்கு காரணம் அந்த பிரபல நடிகை தானாம்..!!

By Priya Ram on ஆகஸ்ட் 27, 2024

Spread the love

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கனியாக வலம் வந்தவர் ரம்பா. இவர் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கார்த்தி, பிரபு, உள்ளிட்டோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரம்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. முதன் முதலில் சுந்தர்.சி இயக்கத்தில் ரிலீசான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் மூலம் ரம்பா ஹீரோயினாக அறிமுகமானார்.

   

அதன் பிறகு காதலா காதலா, அருணாச்சலம், மின்சார கண்ணா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் ரொம்ப நடித்துள்ளார். கடந்த 2019- ஆம் இந்திரகுமார் என்பவரை ரம்பா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகள் மீது எப்போதும் அக்கறையாக இருப்பார். ஆனாலும் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

   

 

அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்ந்து வாழுகின்றனர். இந்த நிலையில் ரம்பா தனது கணவருக்கும் தமன்னாவுக்கும் இடையே இருக்கும் பாண்டிங் பற்றி கூறியுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா தனது கணவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வது இல்லையாம். ஏனெனில் அவரது கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்ததும் தமன்னாவை தான் பாலோ செய்துள்ளார்.

பல வருஷத்துக்கு பிறகு குடும்பத்துடன் தளபதி விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா.!

அதிலிருந்து ரம்பா அவர் கணவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்வதில்லை என கூறியுள்ளார். ரம்பாவின் கணவருக்கு தமன்னாவை தான் மிகவும் பிடிக்குமாம். ஏற்கனவே அவரது புதிய கடை திறப்பு விழாவிற்கு தமன்னாவை தான் சிறப்பு விருந்தினராக வரவழைத்துள்ளார். இதனை கேட்ட நெட்டிசன்கள் தமன்னாவால் ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சனையா என பேசி வருகின்றனர்.