உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாலியா அட்டாரியா ரயில்வே கேட் பகுதியில், ரயில் வேகமாக வந்து கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாகப் பசு ஒன்று தண்டவாளப் பகுதிக்குள் நுழைந்தது. மூடப்பட்டிருந்த பாதையைக் கடந்து சென்ற ரயிலின் பின்புறப் பகுதி பசுவின் மீது பலமாக உரசியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து பசுவின் உயிருக்கு ஆபத்து நேரிட்டிருக்கும் என அஞ்சினர். ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்தப் பசு எந்தவிதக் காயமுமின்றி உடனடியாக எழுந்து அமைதியாக நடந்து சென்றது.
https://www.instagram.com/reel/DbnDiQ2TMcy/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
அங்கிருந்த பயணிகள் இச்சம்பவத்தைத் தங்கள் தொலைபேசியில் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது. ஆன்மீக ரீதியாக புனிதமாகக் கருதப்படும் ஷ்ராவண மாதத்தில் இந்நிகழ்வு நடந்ததால், இது இறைவனின் பேரருள் என்றும் அற்புதச் சம்பவம் என்றும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
