தவெக-விற்கு மாறும் நிர்வாகிகள்…!அதிமுக எதிர்காலம் என்னாகுமோ…? கவலையில் முக்கிய புள்ளிகள்…. ஒரே வார்த்தையில் பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி…!!

By Devi Ramu on ஆடி 17, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் தமக்கு எதிராகச் செயல்படும் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பதவிகளில் இருந்து நீக்கி, கட்சியைத் தன் வசப்படுத்தி வருகிறார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கை வீழ்த்த அவரது ஆதரவாளர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அண்மையில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அதிமுகவினர் பலரும் தவெக-விற்குத் தாவி வருவது கட்சியின் எதிர்காலத்தைக் கரைத்துவிடுமோ என்று மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடியிடம் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

நிர்வாகிகளின் அச்சுறுத்தல்களையும் சந்தேகங்களையும் பொறுமையுடன் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் விதிகளுக்குக் கட்டுப்படாமல் துரோகம் இழைப்பவர்கள் மீது பாரபட்சமின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கித் தந்த 20 முதல் 27 சதவீத வாக்கு வங்கி எந்தக் காலத்திலும் அதிமுகவை விட்டு மாறாது என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதியான ஐந்துக்கும் மேற்பட்ட திறமையாளர்கள் உள்ளதால் கட்சி காணாமல் போகும் என்ற பயம் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிகாரம் அதிமுக வசம் வரப்போவது உறுதி என்பதால், தலைமை இடும் பணிகளைத் தொய்வின்றி செய்யுமாறு அவர் நிர்வாகிகளுக்குத் தைரியம் ஊட்டியுள்ளார்.