அண்ண எங்க அண்ண… “என் அண்ணனின் நிழல் எப்போதும் வேண்டும்…” மேடையிலேயே எமோஷனலான கிரிக்கெட் வீரரின் தங்கை… வைரலாகும் இன்ஸ்டா வீடியோ…!

By Visaka on ஆடி 5, 2026

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் சகோதரியான ஷ்ரேஸ்தா ஐயர், பிரபல ரியாலிட்டி ஷோவான ‘லாக் அப் 2: சச் யா சஸா’ நிகழ்ச்சியிலிருந்து முதலாவதாக வெளியேற்றப்பட்டார். தொலைக்காட்சித் திரையில் தனது எலிமினேஷன் காட்சியைப் பார்த்தபடியே, வீட்டில் தனது குடும்பத்தினருடன் நடனமாடியும், தனது செல்லப் பிராணியுடன் விளையாடியும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “நான் உண்மையாகவே இருக்க வேண்டிய எனது வீட்டிற்குத் திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஷ்ரேஸ்தா, நிகழ்ச்சிக்குப் பிறகும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

   

https://www.instagram.com/reel/DaYT-hyz9bN/?utm_source=ig_embed&ig_rid=AJIXLiopmwEgZ8QqOD8mlKt

   

நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறும் போது, அதன் ஜெயிலரான ஃபரா கான், “இந்த ஷோவில் உங்களது பயணம் முடிவுக்கு வந்திருந்தாலும், உங்கள் சகோதரரின் நிழலில் இருந்து நீங்கள் வெளியே வருவதற்கான பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று நம்புகிறோம்” என்று கூறினார். அதற்குப் பதிலளித்த ஷ்ரேஸ்தா, “அந்த நிழல் எப்போதும் இருக்கும், ஏனெனில் அதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். உடனே ஃபரா கான், “அது ஒரு நிழலாக இல்லாமல் உங்களை வளர்க்கும் ஒரு மரத்தின் நிழலாக இருக்க வேண்டும்” என்று கூற, “அந்தப் பாதுகாப்பு எனக்கு எப்போதும் இருக்கும், அதோடு நானும் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்” என்று ஷ்ரேஸ்தா ஐயர் முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.