என்னது..! தளபதி 69-ஆவது படம் வராதா..? பயத்தில் விஜய் ரசிகர்கள் செஞ்ச வேலைய பாருங்க..!!

By Priya Ram on ஜூன் 19, 2024

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கோட் திரை படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய்யின் 'தி கோட்' எப்போது ரிலீஸ்? - தீயாய் பரவும் தகவல் – News18 தமிழ்

   

இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தளபதி விஜயின் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் இரண்டாவது சிங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார். இந்த நிலையில் விஜய் 69-ஆவது படத்தில் நடிக்க மாட்டார் என்ற செய்திகள் உலா வருகிறது.

   

கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? வெளியான அப்டேட் | Tamil Cinema News

 

இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தளபதி 69 ஆவது படத்தில் நடிக்க வேண்டும். நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். நடிப்பதை நிறுத்த வேண்டாம் என சென்னையில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். மேலும் ஜூலை மாதம் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளில் விஜய் மும்முரமாக இருக்கிறார் எனவும், 69 ஆவது படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை எனவும் செய்திகள் உலா வந்தது. ஆனால் நடிகர் விஜய் தரப்பிலிருந்து கேட்கும்போது செப்டம்பர் 5-ஆம் தேதி கோட் ரிலீஸ் ஆகும்.

Vijay's 'GOAT' release date announcement | விஜய்யின் 'கோட்' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

பின்னர் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு திருச்சியில் வைத்து தான் மாநாட்டை நடத்த போகிறார்களாம். இதற்காக 10 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உடன் மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறதாம். அதனையும் முடித்துவிட்டு அக்டோபர் மாதம் இறுதி அல்லது நவம்பர் மாதம் தொடக்கம் விஜய் தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவலை யூடியூப் வலைப்பேச்சு சேனலில் கூறியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by News7 Tamil (@news7tamil)