குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்… தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்… அரசு அதிரடி உத்தரவு…!

By Nanthini on சித்திரை 17, 2026

Spread the love

தமிழகத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை உறுதி செய்யவும் நான்கு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய தினங்களான ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியிலும் டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, தனியார் பார்கள், மதுக்கூடங்கள் மற்றும் கிளப்கள் அனைத்தும் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உத்தரவை மீறி எவரேனும் விதிமீறலில் ஈடுபட்டால் அல்லது ரகசியமாக மது விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தலின் போது தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த ‘வறண்ட நாட்கள்’ (Dry Days) அறிவிக்கப்பட்டுள்ளன.