மக்களே அலர்ட்…! UPSC மாணவர்களுக்கு TN அரசின் ரூ25,000 ஊக்கத்தொகை… விண்ணப்பிக்க நாளைக்கு தான் லாஸ்ட் டேட்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு, UPSC முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ 25,000 ஊக்கத்தொகை வழங்கும் ஒரு சிறந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் மாணவர்கள், நடப்பு ஆண்டில் நடைபெற்ற UPSC முதல்நிலைத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை, ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, தகுதியுடைய மாணவர்கள் காலதாமதம் செய்யாமல், கீழே உள்ள ‘நான் முதல்வன்’ இணையதள இணைப்பைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.