தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளின் கணவர்கள்… பலரும் பார்க்காத புகைப்படங்கள்…

By Begam

Published on:

பொதுவாக சினிமா நடிகைகள் பலரும் தங்களுடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கம்தான். அதையும் தாண்டி சில நடிகைகள் பிசினஸ்மேன் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை திருமணம் முடித்துள்ளனர். அப்படி தமிழ் சினிமாவின் நடிகைகளின் கணவர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகை அபிராமி:

   

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் அபிராமி. இவர் ராகுல் பவணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பல வருடங்களாக குழந்தை இல்லாததால் சமீபத்தில் இவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

சரண்யா:

தனது முக பாவணையாலும் அழகான பேச்சாலும் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்டவர்தான் சரண்யா. குறிப்பாக விஜயின் தங்கையாக வேலாயுதம் திரைப்படத்தில் நடித்து அசத்து இருப்பார். இவர் அரவிந்த் ஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகை சுகன்யா:

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் சுகன்யா. தற்போதைய இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஆனந்தி:

இவரை கயல் ஆனந்தி என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். கயல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சாக்கிரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சங்கீதா:

பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை படித்தவர் தான் சங்கீதா. இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார். இவர் சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை கோபிகா:

மனசுக்குள்ளே காதல் வந்துச்சா என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் கோபிகாவை யாராலும் மறக்க முடியாது. ஆட்டோகிராப் திரைப்படத்தில் மலையாள பெண்ணாக நடித்த அசத்தியவர். இவர் அகிலேஷ் என்ற மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பத்துடன் அயர்லாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை சிவரஞ்சனி:

90களில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் சிவரஞ்சனி. இவர் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் முடித்த பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

நடிகை மனிஷா கொய்ராலா:

ஹிந்தி நடிகையான இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் சம்பத் தஹால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை அனன்யா:

நாடோடிகள் திரைப்படத்தில் அனன்யா ஹீரோயினியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் ஆஞ்சநேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி விட்டார்.

நடிகை மாளவிகா:

இளைஞர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்த மாளவிகாவை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது சினிமாவிலிருந்து விலகி விட்டார்.

நடிகை பூமிகா:

நடிகர் விஜயின் பத்ரி மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் பூமிகா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டே சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

நடிகை லைலா:

தன்னுடைய சிரிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டவர் தான் நடிகை லைலா. சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த லைலா மெஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன.

நடிகை நதியா:

90களில் தொடங்கி இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகை தான் நதியா. 50 வயதை தாண்டியும் இன்னும் இளமை குறையாமல் அப்படியே இருந்து வருகிறார். இவர் ஹரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பிரியாமணி:

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ப்ரியாமணி. இவர் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.