திடீரென மேடையில் கண்ணீர் விட்டு அழுத சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாள்.. என்ன நடந்தது தெரியுமா..

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் பலர் தற்பொழுது வெள்ளித்திரையில் பிரபலமாக ஜொலித்து வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து தற்பொழுது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

   

ஜூனியர் , சீனியர் என மாற்றி மாற்றி இந்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வேறுபாடு காட்டி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த சீசனில் டிஜே பிளாக் மற்றும் பூஜா  காம்போ தான் ஹிட் என்றே கூறலாம். கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக 10 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு ஸ்கூட்டி வழங்கி போட்டியாளர்களை குஷி  படுத்தி உள்ளனர்.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவர் பாடகர் பென்னி தயாள். இவர் மிகவும் கூலான நடுவர் என்று கூறலாம். இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘அன்புடன் நான்’ என்ற சுற்று நடைபெற உள்ளது. இந்த சுற்றில் நடுவர்களுக்காக போட்டியாளர்கள் பாடி வருகின்றனர்.

தனக்காக ஒரு போட்டியாளர் பாடுவதைக் கண்டு கண்கலங்கி மேடையிலேயே மிகவும் எமோஷனலாக அழுதார் பென்னி தயாள். தற்பொழுது இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..