பொதுமக்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காந்திராஜ் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்குச் சரியான எடையிலும், தரமான முறையிலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் எந்தவிதமான தவறும் நடைபெறக்கூடாது என்றும், ஒருவேளை பொதுமக்களுக்குத் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
