தந்தையின் 59 ஆவது பிறந்தநாள்….. பாசமலையை பொழிந்த மகன்…. நெகிழ வைக்கும் சம்பவம்…. வைரலாகும் வீடியோ…

தனது தந்தையின் பிறந்தநாளுக்கு மகன் ஒரு பைக்கை பரிசாக அளிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வருகின்றது. நாம் சிறு குழந்தையாக இருக்கும்போது நம்மை பெற்றவர்கள் தாய், தந்தை இருவரும் நம்மை அன்பாக பார்த்துக் கொண்டு நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்து நல்ல கல்வி, நல்ல உணவு, நல்ல உடை போன்றவற்றை அளித்து வளர்த்து வருகிறார்கள்.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நமக்கு விரும்பும் பரிசை அளித்து நம்மை மகிழ வைக்க செய்கிறார்கள். ஆனால் வளர்ந்த பிறகு நாம் அவர்களுக்கு திருப்பி என்ன செய்கிறோம் என்று கேட்டால் அதற்கு பெரும்பாலாரிடம் பதில் இல்லை . காரணம் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்களை பாரமாக எண்ணுகிறார்கள். பல ஆசிரமங்களில் பிள்ளைகள் இருந்தும் அனாதையாக இருக்கும் முதியவர்களை நாம் பார்க்கத்தான் முடிகின்றது.
தந்தை தனது 59 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு மகன் ஒரு பரிசளிக்கிறார். அந்த பரிசை ஆவலுடன் பிரித்துப் பார்க்கும் தந்தை ஆச்சரியம் அடைகிறார். அதற்குள் ஒரு சாவி இருக்கின்றது. பின்னர் அவரது மகன் அவரை வெளியில் அழைத்துக் கொண்டு போய் காட்டும்பொழுது ஒரு புல்லட் வண்டி நிற்கின்றது . இதை பார்த்து அவரின் தந்தை மிகவும் சந்தோஷம் அடைகிறார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram