‘சூப்பர் சிங்கர்’ நடுவர் உன்னிகிருஷ்ணன் மகனை பாத்திருக்கீங்களா?… நீங்க இதுவரை இவரை  பார்த்திருக்கவே மாட்டீங்க…

By Begam

Published on:

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடகர் உன்னி கிருஷ்ணன். இவர் திரைப்பட பாடகர் மட்டுமில்லாமல் கர்நாடக இசைக் கலைஞரும் கூட. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தன்னுடைய 12 வயதிலேயே இவர் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொண்டவர். பிறகு கல்லூரி படிப்பு முடிந்து மிட்டாய் கம்பெனி ஒன்றில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார்.

   

அதற்கு பிறகு ஒரு பாடகராக வேண்டும் என்று தன்னுடைய லட்சியத்திற்காக தொழில் வேலையை விட்டு இசைத் துறையில் நுழைந்தார். இவரை திரை உலகிற்கு அழைத்து வந்தவரே இசை புயல் ஏ ஆர் ரகுமான் தான். அவர் மூலம் தான் இவர் பாடகராக ஆனார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கிறார்.

அதிலும் இவருடைய பக்தி பாடல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. லக்ஷ்மன் சுருதி இசைக் குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு’ இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பல வருடங்களுக்கு மேலாக உன்னி கிருஷ்ணன் பாடிக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். பாடகர் உன்னி கிருஷ்ணன் 1994ல்  பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு உத்ரா மற்றும் வாசுதேவ் என்ற ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா ‘சைவம் ‘படத்தில் அழகு என்ற பாடலை முதலில் பாடியிருந்தார்.

அதன்பிறகு பிசாசு, தெறி, லக்ஷ்மி போன்ற பாடங்களிலும் பாடல்கள் பாடியிருக்கிறார். உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தற்பொழுது பாடகர் உன்னிகிருஷ்ணன் தனது மனைவி மகள் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகான குடும்ப  புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்…