ஓட்டு போட இதனால தான் வரல.. எனக்கு ரெட் கார்டு கொடுத்திருக்காங்களா..? செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த சிம்பு..!

By Mahalakshmi on ஜூன் 2, 2024

Spread the love

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு செல்லும்போது நடிகர் சிம்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். இந்த பேட்டி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

   

இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன், சங்கர், ஸ்ருதிஹாசன், ரகுல் ப்ரீத்சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அதிதி சங்கர், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கி சில மணி நேரங்கள் வரை சிம்பு வரவில்லை. ஒரு பக்கம் விழாவில் சிம்பு வரவில்லை என்று அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்த நிலையில் ஒரு வழியாக அனைவரையும் வாயடைக்க செய்யும்படி என்று கொடுத்தார் சிம்பு .

   

 

அந்த நிகழ்ச்சியில் சிம்பு பேசிய அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைத்தது, மேலும் நான் லேட்டா வந்தேன்னு நினைக்காதீங்க, எப்படியும் எல்லாரும் என்ன லேட்டா வந்தேன் என்று கூறி என்னை திட்ட தான் செய்வார்கள், நான் தக் லைப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வருகிறேன் என்று பேசியிருந்தார் . நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியில் வரும்போது செய்தியாளர்களை சந்தித்த சிம்பு செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார்.

முதலாவதாக ஏன் ஓட்டு போட வரவில்லை என்று படத்தின் ஷூட்டிங் -ல் பிஸியாக இருந்ததால் தன்னால் ஓட்டு போடுவதற்கு வர முடியவில்லை. இது எனக்கு சற்று சங்கடமாக இருந்தது. ஆனாலும் படத்தின் ஷூட்டிங்-கை கேன்சல் பண்ணிவிட்டு வரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்று கூறினார்.

அதை தொடர்ந்து தக் லைப் மற்றும் எஸ்டிஆர் 48 பேன் இந்தியா படமாக உருவாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் தனக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது உண்மை இல்லை. சிறிய பிரச்சனை இருந்தது, அதனை நாங்கள் பேசி சரி பண்ணி விட்டோம் வெளியில் தனக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக தவறாக பேசி வருகிறார்கள் என்று கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.