Categories: CINEMA

‘என் கால் மேல நான் கால் போட்டிருக்கேன், இதுல என்ன பிரச்சனை’.. சில்க் சொன்ன லாஜிக்.. புரியவைத்த புலியூர் சரோஜா..

தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.

ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றினாலும் அவருக்கு அந்த துறையில் பெரியளவுக்கு நண்பர்கள் கிடையாது. யாருடனும் சிரித்துப் பேசமாட்டார். அனைவரையும் அவமானப்படுத்துவது போல பதிலளிப்பார் என அவர் மீது நிறையக் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் அவருக்கு திரையுலகில் மிகவும் நெருக்கமான தோழியாக இருந்தவர் புலியூர் சரோஜா அவர்கள்தான்.

சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடனம் ஆடிய பல பாடல்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தவர் புலியூர் சரோஜாதான். தன்னிடம் சில்க் மனம் விட்டு பேசுவார் என்றும் யார் சொன்னாலும் கேட்காதவள் நான் சொன்னால் மட்டும் கேட்டுகொள்வார் என்றும் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார். சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தின் ஷூட்டிங்கின் போது நம்பியாருக்கு எதிரில் அமர்ந்திருந்த சில்க் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அதைப் பார்த்த சரோஜா அப்படி உட்காரக் கூடாது என சொல்லவே “என் கால் மேல கால் போட்டு நான் உக்காந்திருக்கேன். அவர் கால் மேலயா கால் போட்டிருக்கேன். ” எனக் கேட்டுள்ளார். அதன் பிறகு சரோஜா “அவர் ஒரு சீனியர் நடிகர். அவர் முன்னால நாம இப்படி உட்காரக் கூடாது” என எடுத்து சொன்னதும் அதைக் கேட்டுக்கொண்டாராம்.

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

17 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago