டயட் காரணமாக உயிரிழந்த மனைவி.. நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தைகளோடு நடிகர் பரத் கல்யாண்.. இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களே..!

By Mahalakshmi on மே 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகரான பரத் கல்யாண் தனது மனைவி இறந்ததற்கு பிறகு தனது குழந்தைகளுடன் வெளியில் சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது, தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் கல்யாண் குமாரின் மகன் பரத் கல்யாண்.

   

தனது தந்தை போலவே சினிமாவில் முன்னணி நடிகராக வாழவேண்டும் என்று பல முயற்சிகளை செய்த நிலையில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ஜென்டில்மேன், ஆதிலட்சுமி புராணம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

   

ஆனால் அந்த திரைப்படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்காத காரணத்தினால் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். தமிழில் அபூர்வ ராகங்கள், வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்திருக்கின்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் தந்தையாகவும் நடித்து வந்தார்.

 

அதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இலக்கியா சீரியலில் இலக்கியாவின் அப்பாவாகவும் இவர் நடித்திருந்தார். கடந்த 2022 ஆம் மாதம் பரத் கல்யாணின் மனைவி திடீரென்று காலமானார், அவருக்கு வயது 43. தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் டயட்டில் இருந்திருக்கின்றார்,

இதனால் சர்க்கரை நோய் அதிகரித்து சில நாட்கள் கோமாவில் இருந்த அவர் பின்னர் மரணம் அடைந்து இருக்கின்றார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. போலியோ டயட் காரணமாக அவர் உயிரிழந்த செய்தி திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பலரும் பரத் கல்யாண் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். தன்னுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மிகுந்த சோகத்தில் இருந்த பரத் கல்யாண் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் வெளியில் சென்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.