Connect with us

சிம்பு சொன்னதால் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்து காலைவாரிய சந்தானம்… சிவகார்த்திகேயன் வந்த கதையை பற்றி பகீர் கிளப்பிய பிரபலம்

CINEMA

சிம்பு சொன்னதால் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்து காலைவாரிய சந்தானம்… சிவகார்த்திகேயன் வந்த கதையை பற்றி பகீர் கிளப்பிய பிரபலம்

 

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வணிக மதிப்புக் கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக அவரது படங்கள் அதிக கலெக்‌ஷன் செய்வதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.

அவரும் வணிக மதிப்புக் கொண்ட கதைகளையே தேடியெடுத்து நடித்து வருகின்றார். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகர் தனுஷ். தன் மனைவி இயக்கிய 3 படம் மூலமாக அவரைக் காமெடியனாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

   

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் முதலில் தேர்வு செய்தது சந்தானத்தைதானாம். அப்போது சந்தானம் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார். அவரும் நடிகக் சம்மதம் தெரிவித்தாராம். ஆனால் ஷூட்டிங் நெருங்கும் சமயத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டாராம். அதற்குக் காரணம் சிம்புதானாம். சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய சிம்பு சொன்னதால் சந்தானம் அதைக் கேட்டு அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

அதன் பிறகுதான் தனுஷ், சிவகார்த்திகேயனை அந்த வேடத்துக்கு தேர்வு செய்து நடிக்கவைத்தாராம். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி எதிர்நீச்சல் படத்தை எடுத்தார் தனுஷ். அந்த படமும் ஹிட்டானது. அதன் பின்னர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்றது. தனுஷை விட பெரிய ஹீரோவாக சிவகார்த்திகேயன் வளர்ந்தார்.

ஒரு கட்டத்தில் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலேயே ஈகோ மோதல் வந்து அவர்கள் பிரிந்தனர். தனுஷுக்கு எதிரிலேயே அலுவலகம் போட்டி தனுஷின் நண்பர் பட்டியலில் இருந்து சிவகார்த்திகேயன் விலகினாராம். இப்படி சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகன் ஆவதற்கு சிம்புவும், சந்தானமும் கூட ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளனர். இந்த தகவல்களை சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
To Top