கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவருடைய ஐந்து வயது மகள் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து அவரை பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவருக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு 40 முதல் 60 லட்சம் செலவாகும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியை பல ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்ததில் 7 லட்சம் வரை செலவானால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்துள்ளார்.
இதனையடுத்து தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? என்று விசாரித்துள்ளார். அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் பயாஸ் என்பவரின் செல்போன் நம்பர் கொடுத்து உடனடியாக உதவி கேட்க கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பயாஸ் கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து சிறுமியை சந்தித்து ஒரு வீடியோவை உருவாக்கி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி மாலை 6 மணி அன்று அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உதவி கேட்டுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை 10:30 மணிக்கு 75லட்சம் ரூபாய் வசூல் ஆகி உள்ளது. வீடியோ வெளியிட்ட சுமார் 16 மணி நேரத்தில் சிறுமியின் சிகிச்சைக்கு 75 லட்சம் ரூபாய் வசூல் ஆனது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை அடுத்து அந்த குழந்தைக்கு ஓரிரு நாட்களில் சிகிச்சை தொடங்கப்பட உள்ளது.
