தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மட்டும் அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை திருநங்கையர்களுக்கு நீக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கை நட வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்த இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். UMIS இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
