ரஞ்சிதா வழியில் நித்யானந்தாவின் சிஷ்யையான பிரபல நடிகை….. நித்யானந்தாவிற்கு தொடர்ந்து அடித்த ஜாக்பாட்….

By Begam

Published on:

நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளிப்பட்டு சுவாமி நித்தியானந்தாவின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிந்தது. இவரின் உண்மை குணம் தெரிந்தவுடன் இவரை அனைவரும் வெறுத்தனர். மக்களின் வெறுப்புக்கு உள்ளான இவர் கைலாசம் என்ற ஒரு தீவை உருவாக்கி அங்கு தனது சிஷ்யைகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவரும் நிலையில் அவருடைய  சிஷ்யைகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகை கௌசல்யா நித்யானந்தாவை பார்க்க அடிக்கடி கைலாசம் சென்று வருகிறாராம்.

   

நடிகை கௌசல்யா தனது முதுகு வலி பிரச்சனை காரணமாக முதன் முதலில் நித்தியானந்தாவை சந்தித்துள்ளார். முதுகு வலிக்காக சென்றவர் குணமானதா இல்லையா என்று தெரியவில்லை. மொத்தத்தில் நித்தியானந்தாவின் சிஷ்யையாக மாறிவிட்டார். நித்யானந்தா எந்த ஆசிரமத்தில் எல்லாம் இருக்கிறாரோ அங்கெல்லாம் சென்று வருகிறாராம் கௌசல்யா.

இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது கூட நித்தியானந்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகை ரஞ்சிதா தான் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று கவனித்து வருகிறாராம். அந்த வகையில் தற்பொழுது நித்தியானந்தாவின் மற்றொரு தீவிர பக்தையாக  நடிகை கௌசல்யா இணைந்துள்ளார் என்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

author avatar